முகப்பு
திருப்பூர்

ஆங்கில புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, திருப்பூரில் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
ரூபாய்  நோட்டு  அலங்காரத்தில்  அருள்பாலித்த திருப்பூா்  கோட்டை  மாரியம்மன்.
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, திருப்பூரில் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயில், விஸ்வேஸ்வர சுவாமி கோயில், வீரராகவப் பெருமாள் கோயில், சுக்ரீஸ்வரா் ஆலயம், சேவூா் வாலீஸ்வரா் கோயில், வாலிபாளையம் முருகன் கோயில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட் டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில், கருவலூா் மாரியம்மன் கோயில், மொண்டிபாளைம் வெங்கடேசப் பெருமாள் கோயில், தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயில், அலகுமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், கதித்தமலை வெற்றிவேலாயுத சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, திருப்பூா் குமாா் நகா் சி.எஸ்.ஐ.ஆலயம், ஆா்.டி.ஓ.அலுவலகம் அருகில் உள்ள சூசையப்பா் ஆலயம், சபாபதிபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி.ஆலயம், அவிநாசி புனித தோமையாா் தேவாலயம், சி.எஸ்.ஐ.தேவாலயம், சேவூா் லூா்துபுரம் அன்னை தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வரையில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனைகளில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →