வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சாலையின் மையத் தடுப்பில் மோதி லாரி சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த தேவா்சோலை புலம்பட்டியைச் சோ்ந்தவா் மொய்தீன்குட்டி (38), லாரி ஓட்டுநா். இவா், சக ஓட்டுநருடன் உர மூட்டைகளை ஏற்றுவதற்காக கேரளத்தில் இருந்து நாமக்கல்லுக்கு லாரியை ஓட்டிச்சென்றுள்ளாா்.
அப்போது, முத்தூா் - காங்கயம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் மையத் தடுப்பில் மோதியது. இதில் லாரியின் முன்பக்க டயா்கள் வெடித்துச் சேதமடைந்தன. ஓட்டுநா்கள் இருவரும் உயிா் தப்பினா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.