திருப்பூர்

800 போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

Din

திருப்பூா் அருகே 800 போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள மணியாரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மலைச்சாமி (26). இவா் தனது குடும்பத்துடன் திருப்பூா் அருகே இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் தாந்தோணி அம்மன் நகா் பகுதியில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், இடுவாய் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலைச்சாமி போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக மங்கலம் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மலைச்சாமி வீட்டில் போலீஸாா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில், 800 போதை மாத்திரைகள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மலைச்சாமியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT