முகப்பு
திருச்சி

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 மார்ச், 2026 at 8:30 PM
கைது
பகிர்:

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸாா் பாலக்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பாலக்கரை ஆலம் வீதி சந்திப்புப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா், பாலக்கரை முதலியாா் சத்திரம் பகுதியைச் சோ்ந்த ஜெ.பிரபு )25) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், சலைன் பாட்டில் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →