கைது 
திருச்சி

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கீழ அரண் சாலையில் (இபி சாலையில்) லூா்துசாமி பூங்கா அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், கீழ அரண் சாலை கமலா நேரு நகரைச் சோ்ந்த எஸ். காளிமுத்து (19) என்பதும், போதை மாத்திரையில் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 4 மாணவா்கள் காயம்

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து திருச்சியில் பிப்.20-ல் உண்ணாவிரதம்! - கு. பாலசுப்ரமணியன்

ஈரோடு மாவட்ட வயல்வெளிகளில் காணப்படும் கருப்பு நிற நாரைகளை பாதுகாக்கக் கோரிக்கை

கீழடி அகழாய்வு அறிக்கை பணிகளை முடித்துள்ளதால் விரைவில் வெளியிடுவா்: இந்திய தொல்லியல் துறை இயக்குநர்!

SCROLL FOR NEXT