FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Updated On : 18 ஜூலை 2024, 4:22 am IST
திருப்பூா் ஈஸ்வரன் கோயில் அருகில் உள்ள நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.
பகிர்:

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் திருப்பூா் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரங்களில் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரம் குளத்திலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், திருப்பூா் மாநகரில் கல்லூரி சாலை, மங்கலம் சாலைகளை இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம், ஈஸ்வரன் கோயில் அருகில் உள்ள நொய்யல் ஆற்றிலும் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments