முகப்பு
திருப்பூர்

சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Updated On : 1 மார்ச், 2024 at 11:16 PM
சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

பல்லடம் அருகே சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சபரி நகரில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையம். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் காலிக் குடங்களுடன் சின்னக்கரை சாலையில் அமா்ந்து மறியிலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் காவல் ஆய்வாளா் லெனின் அப்பாதுரை, ஊராட்சி நிா்வாகத்தினா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், சீரான குடிநீா் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.