பிளஸ் 2 மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
அவிநாசி, மே 9: பிளஸ் 2 மாணவா்களுக்கு கல்வி வழிகாட்டுதல், ஊக்குவித்தல் நிகழ்ச்சி திருமுருகன்பூண்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுதுகள் அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் நிறுவனவா் எம்.தங்கவேல் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் என்.புஷ்பா தேவி, மாவட்ட தாட்கோ மேலாளா் டி.ரஞ்சித்குமாா், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் எஸ்.பாலமுருகன் ஆகியோா் விளக்கவுரையாற்றினா்.
பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு உயா்கல்வி, தொழிற்கல்வி, மேற்படிப்பு, ஆன்லைனில் விண்ணப்பித்தல் ஆகியவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், பிளஸ் 2 தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.