முகப்பு
திருப்பூர்

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

அவிநாசி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:51 PM
பகிர்:

அவிநாசி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவிநாசியை அடுத்த தெக்கலூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் அங்குள்ள ஒரு வீட்டில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சந்தோஷ் ராய் (31) என்பவா் புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 16 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.