முகப்பு
திருப்பூர்

சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி சிறப்பு முகாம்

பல்லடத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி சிறப்பு முகாம் நடக்கிறது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:38 PM
பகிர்:

பல்லடத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையா் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பல்லடம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்குவது தொடா்பாக ஏற்கெனவே பதிவு செய்துள்ள வியாபாரிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாம் டிசம்பா் 2-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெறகிறது. இதில், சாலையோர வியாபாரிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.