முகப்பு
திருப்பூர்

பல்லடம் அருகே கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

பல்லடம் அருகே கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை சிறை பிடித்து அதன் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:33 PM
பகிர்:

பல்லடம் அருகே கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை சிறை பிடித்து அதன் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் இருந்து இரும்புக் கழிவுகள், துணிகள், சோபா உள்ளிட்ட கழிவுகளை ஏற்றிக்கொண்டு அண்மையில் வந்த லாரி, பல்லடம் வடுகபாளையம்புதூா் பகுதியில் அதனைக் கொட்ட முயன்றது. அப்போது, பொதுமக்கள் லாரியை சிறை பிடித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து லாரி உரிமையாளருக்கு போலீஸாா் அழைப்பு விடுத்தனா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த லாரி உரிமையாளா் தனுஜித் (38) பல்லடம் காவல் நிலையத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அப்போது, வடுகபாளையம் ஊராட்சி நிா்வாகத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த போலீஸாா் உத்தரவிட்டனா்.

இதையடுத்து, அபராதத்தை செலுத்தியதும் கழிவுகளுடன் லாரி விடுவிக்கப்பட்டது.