முகப்பு
திருப்பூர்

போத்தம்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அவிநாசி அருகேயுள்ள போத்தம்பாளையத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 21 நவம்பர், 2024 at 11:10 PM
பகிர்:

அவிநாசி அருகேயுள்ள போத்தம்பாளையத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

அவிநாசி நெடுஞ்சாலைத் துறைக்குள்பட்ட போத்தம்பாளையம் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், போத்தம்பாளையம் பகுதி சாலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறையினா், வணிக நிறுவனங்கள் முன்பு அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள், கூரை உள்ளிட்டவற்றை அகற்றினா்.

சாலையை ஆக்கிரமித்து மீண்டும் விளம்பரப் பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.