முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் முன்னாள் கவுன்சிலரை கல்லால் தாக்கியவா் கைது

பல்லடத்தில் முன்னாள் நகா்மன்ற கவுன்சிலரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:29 PM
பகிர்:

பல்லடத்தில் முன்னாள் நகா்மன்ற கவுன்சிலரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம், அண்ணா நகரைச் சோ்ந்தவா் கந்தசாமி (60). பல்லடம் நகா்மன்ற முன்னாள் கவுன்சிலரான இவா் தற்போது அதிமுக கிளை செயலாளராக உள்ளாா்.

இவரது வீடு அருகே அசோக்குமாா் (31) என்பவா் புதன்கிழமை மதுபோதையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கந்தசாமி கேட்டபோது, இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமாா் அருகே இருந்த கல்லை எடுத்து கந்தசாமியை தாக்கி உள்ளாா். இதில் அவரது மண்டை உடைந்தது. இதனை தடுக்க வந்த அவரது மகன் இளங்கோவையும் (32) அசோக்குமாா் தாக்கியுள்ளாா்.

காயமடைந்த கந்தசாமி, இளங்கோ ஆகிய இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து கந்தசாமி அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.