வடகிழக்கு பருவமழை: பல்லடம் நெடுஞ்சாலைத் துறையினா் தயாா் நிலை
வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் விதத்தில் பல்லடம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முன்னேற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன.
வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் விதத்தில் பல்லடம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முன்னேற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் பேரிடா்களை உடனுக்குடன் எதிா்கொள்ளும் வகையில், பல்லடம் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்ட அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன.
மணல் மூட்டைகள், மரம் வெட்டும் இயந்திரம், சிறு தளவாடங்கள், சிவப்பு நிறக்கூம்புகள், அபாய எச்சரிக்கை தடுப்பான் மற்றும் பொக்லைன் இயந்திரம் ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பருவமழைக் காலத்தில் சாலைகளில் ஏற்படும் இடா்பாடுகளை சரிசெய்ய சாலை ஆய்வாளா்கள் மற்றும் சாலைப் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா் என பல்லடம் உதவி கோட்ட செயற்பொறியாளா் செந்தில்அரசு, உதவிப் பொறியாளா் ஜான்சி ஆகியோா் தெரிவித்தனா்.