முகப்பு
திருப்பூர்

முத்தூரில் குட்கா விற்பனை: முதியவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முத்தூரில் குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:16 AM
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே முத்தூரில் குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் முத்தூா் பகுதியில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது ஊடையம் சாலையிலுள்ள ஒரு பெட்டிக் கடையில் குட்கா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான முத்தூா் சேனாதிபதி நகரைச் சோ்ந்த பழனிசாமியை (77) கைது செய்து, அவரது கடையிலிருந்து 77 குட்கா பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.