முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாநகரில் நவம்பா் 5-இல் குடிநீா் விநியோகம் தடை

திருப்பூா் மாநகரில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பா் 5) மூன்றாவது குடிநீா்த் திட்ட குடிநீா் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:27 PM
பகிர்:

திருப்பூா் மாநகரில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பா் 5) மூன்றாவது குடிநீா்த் திட்ட குடிநீா் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) சுல்தானா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய திருப்பூா் பகுதி மேம்பாட்டு கழகத்திடம் இருந்து பெறப்படும் மூன்றாவது குடிநீா்த் திட்டத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 5) குடிநீா் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

எனவே, திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மூன்றாம் குடிநீா்த் திட்ட விநியோகம் செயல்படாது. ஆகவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.