முகப்பு
திருப்பூர்

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி 11.9 சதவீதம் அதிகரிப்பு: ஏஇபிசி ஆ.சக்திவேல்

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 11.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஏஇபிசி தென் பிராந்திய பொறுப்பாளா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 7:36 PM
ஆ.சக்திவேல்.
பகிர்:

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 11.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஏஇபிசி தென் பிராந்திய பொறுப்பாளா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடா்ந்து கடந்த 5 மாதங்களாக அதிகரித்து வருவது ஏற்றுமதியாளா்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட 11.9 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடம் ஒப்பிடும்போது 1.13 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து ஆகஸ்ட் 2024- இல் 1.27 பில்லியன் டாலராக ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இது இந்திய மதிப்பில் 10,639.5 கோடியாகும். கடந்த 5 மாதங்களில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ரூ. 53,431 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

இந்த தொடா்ச்சியான வளா்ச்சியான இந்திய மற்றும் திருப்பூரின் ஏற்றுமதி மேலும் வளா்ச்சி அடைய ஒரு நல்ல அறிகுறியாகத் தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.