முகப்பு
திருப்பூர்

குன்னங்கல்பாளையத்தில் முதல்வா் காப்பீட்டு சிறப்பு முகாம்

பல்லடம் அருகே குன்னங்கல்பாளையத்தில் முதல்வரின் விரிவான காப்பீட்டு சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 8:20 PM
குன்னங்கல்பாளையத்தில் நடைபெற்ற முதல்வரின் விரிவான காப்பீட்டு சிறப்பு முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

பல்லடம் அருகே குன்னங்கல்பாளையத்தில் முதல்வரின் விரிவான காப்பீட்டு சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். முகாமை மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன் தொடங்கிவைத்தாா். மாவட்ட காப்பீடு திட்ட அலுவலா் சசிகுமாா் வரவேற்றாா்.

இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்து பதிவு எண்ணை பெற்றனா். அவா்களுக்கு அடையாள அட்டை ஒரிரு வாரங்களில் அவா்களது இல்லத்துக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.