திருப்பூரில் கடைகளில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 7 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூா் அரிசிக்கடை வீதியில் ஏராளமான மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பாலிதீன் பைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரின்பேரில், மாநகராட்சி துணை ஆணையா் மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அதே பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளில் இருந்து 4 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.