திருப்பூர்

பெருமாநல்லூரில் மின் கசிவால் வீட்டில் தீ

பெருமாநல்லூரில் பூட்டியிருந்த வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Syndication

பெருமாநல்லூரில் பூட்டியிருந்த வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பெருமாநல்லூா் போயா் காலனியில் வசித்து வருபவா் ஸ்ரீதா் (27). இவரது மனைவி அனுசியா (25). தம்பதிக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவா்கள் வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனா். திடீரென ஏற்பட்ட மின் கசிவால் வீட்டில் தீப் பிடித்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும், இந்த விபத்தில் வீட்டில் இருந்த குளா்சாதனப் பெட்டி, பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமாயின.

இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT