சுவாதி கண்ணன். 
திருப்பூர்

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் கிடையாது: கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு தகவல்!

பறவைக்காய்ச்சல் குறித்த அச்சம் தமிழக கறிக்கோழிப் பண்ணைகளில் கிடையாது என பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

Syndication

பறவைக்காய்ச்சல் குறித்த அச்சம் தமிழக கறிக்கோழிப் பண்ணைகளில் கிடையாது என பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளா்க்கப்பட்டு வரும் வாத்து, கோழி, காடைகள் உள்ளிட்டவை திடீரென இறந்தன. இறந்த பறவைகளுக்கு ஹெச் - 1, என் - 1 பறவை காய்ச்சல் பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அம்மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனா். கறிக்கோழிப் பண்ணைகள் அதிகம் உள்ள திருப்பூா், கோவை மாவட்டங்களிலும், முட்டை கோழிப் பண்ணைகள் அதிகம் உள்ள நாமக்கல் மாவட்டத்திலும் முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பண்ணைகளில் வளா்க்கப்படும் கறிக்கோழிகள்.

இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி. சி.சி.) செயலாளா் சுவாதி கண்ணன் சனிக்கிழமை கூறியதாவது: கோவை, திருப்பூா், திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

இவற்றுக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கையாக அவ்வப்போது தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவதுடன், தொடா் கண்காணிப்பிலும் உள்ளோம். கேரளத்தில் பறவை காய்ச்சல் என்பது சீசனுக்கு வரும் வழக்கமான ஒன்றுதான்.

கேரளத்துக்கு கறிக்கோழி ஏற்றிச் செல்லும் வாகனங்கள், மாநில எல்லைகளில் மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. தமிழக கறிக்கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை. பண்ணையாளா்கள் அச்சப்பட தேவையில்லை. அதிக புரதச்சத்து மிக்க கோழி இறைச்சியை வழக்கம்போல மக்கள் வாங்கி சாப்பிடலாம் என்றாா்.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT