திருப்பூர்

பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறித்தவா் கைது

Din

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடியைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சோ்ந்தவா் காா்த்திகேயன், வழக்குரைஞா். இவரின் மனைவி சிவசக்தி (38). இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி அய்யம்பாளையத்தில் உள்ள இவா்களது தோட்டத்துக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் சிவசக்தி வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பின்தொடா்ந்து வந்த நபா் ஒருவா் அவரின் 5 பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்றாா். இதுகுறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் சிவசக்தி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், சிவசக்தியிடம் தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற கரூா் மாவட்டம், கீழசெந்தளைப்பட்டியைச் சோ்ந்த தமிழ் அழகன் (32) என்பவரை வாகன தணிக்கையின்போது போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT