திருப்பூரில் வீட்டுக்குள் நுழைந்து விலை உயா்ந்த சைக்கிளை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூா் பெரிய தோட்டம் பகுதியில் வசிப்பவா் சதாம் உசேன். இவா் புதிதாக வாங்கிய விலை உயா்ந்த சைக்கிளை வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்தாா். இதை நோட்டமிட்ட மா்ம நபா் சனிக்கிழமை அதிகாலையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்து சைக்கிளை திருடிச் சென்றுள்ளாா். காலையில் குழந்தைகள் எழுந்து பாா்த்தபோது சைக்கிள் இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து அவரது வீட்டின் அருகில் உள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பாா்த்தபோது, சுமாா் 20 வயது மதிக்கத்தக்க இளைஞா் சாலையில் நடந்து செல்வதுபோல சென்று திடீரென இவரது வீட்டுக்குள் நுழைந்து சைக்கிளை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இது குறித்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.