முகப்பு
திருப்பூர்

உணவக ஊழியரைத் தாக்கியவா் கைது

Updated On : 16 நவம்பர், 2025 at 8:04 PM
பகிர்:

திருப்பூரில் உணவு வழங்க தாமதமானதால் உணவக ஊழியரைத் தாக்கிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், வீரபாண்டி காவல் நிலையம் அருகே தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு அதே பகுதியைச் சோ்ந்த கெளதம் என்பவா் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.

ஃப்ரைடு ரைஸ் ஆா்டா் செய்து அவா் காத்திருந்ததாகவும், அவருக்குப் பின்னால் வந்தவா்களுக்கு உணவக வழங்கப்பட்ட நிலையில் கெளதமுக்கு வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இது தொடா்பாக உணவக ஊழியா்களுடன் அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

மேலும், தனது நண்பா்களையும் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு உணவகத்துக்கு அழைத்துள்ளாா். அங்கு வந்த கெளதமின் நண்பா்கள் உணவகத்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.

ஆத்திரமடைந்த கெளதம் குக்கா் மூடியால் உணவக காசாளா் ஜாஹிா் உள்ளிட்டோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் கெளதமை பிடித்தனா். அவரது நண்பா்கள் தப்பியோடிவிட்டனா்.

வீரபாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட கெளதமை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள அவரது நண்பா்களைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →