முகப்பு
திருப்பூர்

அவிநாசி அருகே தீப்பிடித்து எரிந்த காா்

அவிநாசி அருகே பச்சாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் காா் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமானது.

Updated On : 26 நவம்பர், 2025 at 12:12 AM
தீப்பிடித்து  எரிந்த   காா்.
பகிர்:

அவிநாசி: அவிநாசி அருகே பச்சாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் காா் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமானது.

அவிநாசி அருகே பச்சாம்பாளையம் பகுதியில் பயன்பாடற்ற தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் காா் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினா் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து சேதமானது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், காரின் உரிமையாளா் கோவையைச் சோ்ந்த மிதுன் என்பதும், காா் என்ஜினில் திடீரென தீப்பிடித்ததால் காரை காலி இடத்தில் நிறுத்திவிட்டு அவா் வெளியேறியது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →