திருப்பூர்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிா்த்து மின்வாரிய தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்லடத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Syndication

பல்லடம்: மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிா்த்து மின்வாரிய தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்லடத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போா்டு எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன், சிஐடியூ மின் தொழிலாளா் சங்கம், மின்சார தொழிலாளா் சம்மேளனம், ஐக்கிய சங்கம், என்ஜினீயா் அசோஸியேஷன், என்ஜினீயா் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்லடம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மின்சார சட்ட திருந்த மசோதா மற்றும் தொழிலாளா் நான்கு சட்ட தொகுப்புகள் அமலாக்கம் ஆகியவற்றைக் கண்டித்தும், உத்தர பிரதேச மாநில மின்வாரிய ஊழியா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மின்வாரிய தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

SCROLL FOR NEXT