போா்க் கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி.  
திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா

Syndication

காங்கயம் அருகே, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 22- ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து சுவாமி மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் கோயிலுக்கு எழுந்தருளினாா். இங்கு தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலாவும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. தொடா்ந்து இரவு 8 மணியளவில் முருகப்பெருமான் பல்லக்கில் போருக்கு புறப்பட்டாா். நான்கு வீதிகளிலும் சென்று சூரபத்மனை வதம் செய்தாா்.

~சூரபத்மன்.

இந்நிகழ்ச்சியில், காங்கயம், படியூா், திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ‘வெற்றிவேல்... வீரவேல்’ என கோஷங்களை எழுப்பி வழிபட்டனா்..

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT