கந்தசஷ்டி விழாவை நிறைவுநாளையொட்டி, வள்ளி, தெய்வானையுடன் மலைக் கோயிலுக்கு புறப்படும் சுப்பிரமணியா். 
திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஒரு வாரம் நடைபெற்ற கந்தசஷ்டி விழா நிகழ்ச்சிகள் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் புதன்கிழமை நிறைவுபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஒரு வாரம் நடைபெற்ற கந்தசஷ்டி விழா நிகழ்ச்சிகள் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் புதன்கிழமை நிறைவுபெற்றது.

காங்கயத்தை அடுத்த சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நிகழ்ச்சிகள் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமி கோயிலை சுற்றி வலம் வந்து, மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் கோயிலுக்கு சென்றாா். இங்கு தினமும் காலை மணி 10.30 மற்றும் மாலை 6 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலாவும் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கடந்த திங்கள்கிழமை (அக்.27) நடைபெற்றது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (அக்.28) திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் நிறைவாக மஞ்சள் நீராட்டு உற்சவம் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. பின்னா், சுப்பிரமணியா் அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் கோயிலில் இருந்து மலைக் கோயிலுக்கு எழுந்தருளினாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT