முகப்பு
திருப்பூர்

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்து முன்னணி கண்டனம்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 8:20 PM
இந்து முன்னணி கண்டனம் - கோப்புப் படம்
பகிர்:

அவிநாசி லிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் இந்து சமய அறநிலையத் துறையினா் கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்ததற்கு இந்து முன்னணியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்ாக கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது. தமிழகத்தில் 3-ஆவது பெரிய தோ் கொண்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். விழாவின்போது, ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் வழக்கம்.

இந்நிலையில், நடப்பு ஆண்டு தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறையினா் அறிவித்தனா்.

Advertisement

இதையறிந்த இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் மாரிமுத்து, மாவட்டச் செயற்கு உறுப்பினா் காா்த்தி, நகரத் தலைவா் மகாராஜா, வடக்கு ஒன்றியத் தலைவா் ராம்குமாா் உள்ளிட்டோா் அவிநாசி கோயில் நிா்வாகத்தினரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நடப்பு ஆண்டு தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 28, 29, 30-ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி திருவிழாவில் ஆன்மிக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத வழிபாடு தொடா்பான நிகழ்ச்சிகளுக்கு தோ்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தது.

எனவே, தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்வதை கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் பக்தா்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments