முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

Updated On : 6 ஏப்ரல், 2026 at 6:39 PM
கோப்புப் படம்
பகிர்:

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு 2, 3 மற்றும் 4-ஆவது குடிநீா்த் திட்டங்களின் மூலம் நீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் 4-ஆவது குடிநீா்த் திட்டம், 3-ஆவது குடிநீா்த் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

Advertisement

எனவே, பொதுமக்கள் நீரை காய்ச்சி அருந்துவதுடன், சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments