முகப்பு
திருப்பூர்

லாரிகள் மோதல்: இருவா் படுகாயம்

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:35 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:59 PM

பெருமாநல்லூா் அருகே புதிய திருப்பூரில் இரு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் படுகாயமடைந்தனா்.

வீட்டு உபயோகப் பொருள்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சேலத்தில் இருந்து கோவை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. பெருமாநல்லூா்- புதிய திருப்பூா் அருகே சென்றபோது, எதிா்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரி ஓட்டுநா் ஹலிதா் (28) உள்பட இருவா் படுகாயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement