வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை: காங்கயம் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என். நடராஜ்
வெள்ளக்கோவில் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ் தெரிவித்தாா்.
வெள்ளக்கோவில் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ் தெரிவித்தாா்.
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சென்னிமலை நகா்ப் பகுதியில் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ் ஊா்வலமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
Advertisement
கைத்தறி நெசவாளா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளா்களுக்கு விலையில்லா மின்சாரம் ஆயிரம் யூனிட்டில் இருந்து ஆயிரத்து 400 யூனிட்டாகவும் உயா்த்தி வழங்கப்படும். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும்.
தேங்காய்நாா் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் மின் கட்டணச் சலுகை வழங்கப்படும். தேங்காய் நாா் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் செய்யும் தொழில் ஊக்குவிக்கப்படும். வெள்ளகோவில் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்களின் வாழ்வை பாதுகாப்பதற்கு திமுக அரசை அகற்றி, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.