முகப்பு
திருப்பூர்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சூரிய-சந்திர மண்டலக் காட்சிகள்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழாவையொட்டி, சூரிய-சந்திர மண்டலக் காட்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 2:55 AM
சூரிய -சந்திர  மண்டலக்  காட்சியில்  அருள்பாலித்த  விநாயகா், ஆனந்தவல்லி தாயாா்,  சந்திரசேகா்.
பகிர்:

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழாவையொட்டி, சூரிய-சந்திர மண்டலக் காட்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாக தொடங்கியது. இதைத்தொடா்ந்து இரவு பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா வருதலும், இரவு திருமுருகன்பூண்டியில் இருந்து திருமுருகநாதா் வருகையும் நடைபெற்றது.

இதையடுத்து 2-ஆம் நாள் திருவிழாவாக புதன்கிழமை இரவு சூரிய-சந்திர மண்டலக் காட்சிகள் நடைபெற்றன.

Advertisement

சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தவல்லி தாயாா், சந்திரசேகரா் எழுந்தருளி ரத வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.