முகப்பு
திருப்பூர்

பஞ்சலிங்க அருவி இன்று மூடல்

திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவி வியாழக்கிழமை (ஏப்.23) ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 2:59 AM
பஞ்சலிங்க அருவி
பகிர்:

திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவி வியாழக்கிழமை (ஏப்.23) ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூா் மாவட்டத்தின் சுற்றுலா தலமான திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவி வியாழக்கிழமை (ஏப்.23) மூடப்படுகிறது. 24-ஆம் தேதி முதல் வழக்கம்போல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.