எஸ்.ஐ.ஆர். பணியில் ஒரு தொகுதியில் மட்டும் 500 அதிகாரிகள் நீக்கம்!
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஒரு தொகுதியில் மட்டும் 500 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக மமதா பானர்ஜி பேச்சு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது ஒரு தொகுதியில் மட்டும் 500 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று (ஏப். 5) குற்றம் சாட்டினார்.
மாநிலத்தின் நிர்வாகப் பணிகளைப் பாதிக்கக்கூடிய வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
Advertisement