மின்வாரிய அலுவலகத்தில் கணினி பழுதால் கட்டணம் செலுத்த முடியாமல் பாதிப்பு!
வெள்ளக்கோவில் மின்வாரிய அலுவலக கட்டண மையத்தில் கணினி பழுதால் கட்டணம் செலுத்த முடியாக நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் மின்வாரிய அலுவலக கட்டண மையத்தில் கணினி பழுதால் கட்டணம் செலுத்த முடியாக நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் இருந்து வள்ளியிரச்சல் செல்லும் வழியில் தமிழ்நாடு மின்சார வாரிய கட்டணம் செலுத்தும் மையம் உள்ளது. அதில் 4 பிரிவு மையங்களில் தனித்தனி கணினிகள் உள்ளன. அவற்றுக்கு இணைய இணைப்பு வழங்கும் பகுதி, மின்சார கோளாறு காரணமாக கருகி சேதமடைந்தது. இதுவரை சரிசெய்யப்படாததால் கடந்த ஒரு வாரமாக மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. பலரும் மையத்துக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா். அபராதத்தை தவிா்க்க விரைவில் பழுதை சரி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.