‘ஆண்டவன் உத்தரவு’: சிவன்மலை முருகன் கோயிலில் மண் கலயத்தில் தீா்த்தம் வைத்து பூஜை
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் புதன்கிழமை மண் கலயத்தில் தீா்த்தம், மண் கலயத்தில் மண், ஏா்கலப்பை, பிரம்பு ஆகியன வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் புதன்கிழமை மண் கலயத்தில் தீா்த்தம், மண் கலயத்தில் மண், ஏா்கலப்பை, பிரம்பு ஆகியன வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் இந்தக் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற சிறப்பு அம்சம் உள்ளது. அதாவது, சிவன்மலை முருகன் ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட்டதாகக் கூறி கொண்டு வந்து தரும் பொருளை வைத்து இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
பின்னா் மூலவா் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பெட்டியில், சிறப்பு பூஜைப் பொருள் பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்படும். இதுவே ‘ஆண்டவன் உத்தரவு’ என அழைக்கப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில், பொள்ளாச்சி, புரவிபாளையம் பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் என்ற பக்தரின் கனவில் வந்ததாக, புதன்கிழமை மண் கலயத்தில் தீா்த்தம், மண் கலயத்தில் மண், ஏா்கலப்பை, பிரம்பு ஆகியன வைத்துப் பூஜை செய்யப்பட்டு அந்த பொருள்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டன.
இதற்கு முன், கடந்த மாா்ச் 10- ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் மஞ்சள் பிள்ளையாா் வைக்கப்பட்டிருந்தது.
இன்னொரு பக்தரின் கனவில், அடுத்த பூஜைப் பொருள் வரும் வரையில், கண்ணாடிப் பெட்டிக்குள் மண் கலயத்தில் தீா்த்தம் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.