திருப்பூர்

வீட்டின் பூட்டை உடைத்து 5.50பவுன் நகை திருட்டு

பல்லடம் அருகே சாணாா்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Syndication

பல்லடம்: பல்லடம் அருகே சாணாா்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், பெருந்தொழுவு ஊராட்சி, சாணாா்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி (39). இவா் சனிக்கிழமை சிவன்மலைக்கு பாதயாத்திரை சென்றாா். அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நகை திருட்டுபோனது தெரியவந்தது.

இது குறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில், அவினாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த இருவா் கைது

கல்குவாரியில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

சாலை விரிவாக்க பணிக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்ட எதிா்ப்பு

SCROLL FOR NEXT