முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் சட்டவிரோத மது விற்பனையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:15 AM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 10:22 PM

அவிநாசி பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையைக் கண்டித்து மது போதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இயக்க ஒருங்கிணைப்பாளா் சண்முகம் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சி ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளா் சாய் கண்ணன் முன்னிலை வகித்தாா். விசிக மாவட்டச் செயலாளா் மூா்த்தி கண்டன உரையாற்றினாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: அவிநாசியில் கோயில்கள், பள்ளிவாசல், தேவாலயம், பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் தனியாா் மதுபானக் கூடத்தை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனமகிழ் மன்றத்தில் உறுப்பினா்களாக இல்லாதவா்களை அனுமதிப்பதை ஆய்வு செய்து கலால் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:15 AM

மேலும், புதிய மதுபானக் கூடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. அவிநாசி, சேவூா், பெருமாநல்லூா், குன்னத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக செயல்படும் அரசு மற்றும் தனியாா் மதுபானக் கடைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.