காங்கேயம் கல்விக் குழுமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன். 
திருப்பூர்

காங்கேயம் கல்விக் குழுமத்தில் 598 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

தினமணி செய்திச் சேவை

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் கல்விக் குழுமத்தில் இறுதி ஆண்டு படிக்கும் 598 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை வழங்கினாா்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காங்கேயம் கல்விக் குழுமத்தின் தாளாளா் எஸ்.ஆனந்த வடிவேல் தலைமை வகித்தாா்.

இதில், காங்கேயம் கல்விக் குழுமத்துக்குள்பட்ட காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மாணவா்கள் 253 போ், காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமா்ஸ் கல்லூரி மாணவா்கள் 345 போ் என மொத்தம் 598 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மடிக்கணினிகளை வழங்கி, சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி முதல்வா் எஸ்.ராம்குமாா், காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமா்ஸ் கல்லூரியின் முதல்வா் ஜி.சுரேஷ், துறை சாா்ந்த அலுவலா்கள், போராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT