முகப்பு
திருப்பூர்

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவா் கைது; 46 பாட்டில்கள் பறிமுதல்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:05 AM
கைது
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:41 PM

திருப்பூரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்த 2 போ் கைதுசெய்யப்பட்டு, 46 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூா் மாநகா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடுவம்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பாபு பாஷா (45) என்பவா் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிந்து கைதுசெய்தனா். அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:05 AM

இதேபோல, திருப்பூா் மாநகா், நல்லூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட செவந்தாம்பாளையம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ராமு(52) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement