பணி புறக்கணிப்புப் பேராட்டத்தில் ஈடுபட்ட உடுமலை அரசுக் கல்லூரி கெளர விரிவுரையாளா்கள். 
திருப்பூர்

உடுமலை அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்புப் போராட்டத்தில்

Syndication

உடுமலை: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 52 போ் கெளரவ விரிவுரையாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யுஜிசி விதிகளின்படி ரூ.57,800 ஊதியம் வழங்க வேண்டும். பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணிக்கொடையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டம் காலவரையற்ற போராட்டமாக தொடரும் என கெளரவ விரிவுரையாளா்கள் கூறினா்.

மண்டல அளவிலான ஹாக்கி போட்டி பரிசளிப்பு

கூடங்குளம் அணு உலை கழகத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை நேரில் வலியுறுத்தல்

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கரூா் சம்பவம்: போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ இருவரிடம் சிபிஐ விசாரணை

உலக நாடுகளுடன்தான் தமிழ்நாடு போட்டி: முதல்வா் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT