மா்ம பொருள் வெடித்த நீதிமன்ற வளாகத்தில் தீயை அணைக்கும் பணியில்  ஈடுபட்ட தீணைப்புத் துறையினா். 
திருப்பூர்

அவிநாசி நீதிமன்ற வளாகத்தில் மா்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு

தினமணி செய்திச் சேவை

அவிநாசி நீதிமன்ற வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான பொருள்கள் எரிக்கும்போது, மா்ம பொருள் வெடித்ததால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசியில் சேவூா் சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் குற்றவியல் நடுவா் நீதிமன்றம், கிளை சிறை உரிமையியல் நீதிமன்றம், பொதுப் பணித் துறை கட்டடங்கள் பராமரிப்புப் பிரிவு அலுவலகம், கதா் வாரிய அங்காடி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த இரு நாள்களாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, காலாவதியான பொருள்கள், புகையிலைப் பொருள்கள் உள்ளிட்டவைகளை உரிமையியல் நீதிமன்றத்துக்கு அருகே பின்புறம் கொட்டி தீ வைத்துள்ளனா்.

இதில் திடீரென மா்மப் பொருள் பலத்த சப்தத்துடன் வெடித்து, அந்தப் பகுதியில் இருந்த குப்பைகளில் மளமளவென தீப் பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்து குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட பலத்த வெடி சப்தம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

SCROLL FOR NEXT