கைது 
திருப்பூர்

சக தொழிலாளியைத் தாக்கியவா் கைது

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவிலில் சக தொழிலாளியைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வெள்ளக்கோவில் சேனாபதிபாளையம் வருவாய் கிராமம் ஸ்ரீ ராம் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (46). கட்டட சென்ட்ரிங் வேலைக்குச் சென்று வருகிறாா்.

இவரும், அவருடைய சகோதரா் சந்திரன் (50), உடன் வேலை செய்யும் சேனாபதிபாளையம் கிருஷ்ணா காா்டனை சோ்ந்த மூா்த்தி (40) ஆகிய மூன்று பேரும் கடந்த வியாழக்கிழமை மது அருந்திவிட்டு அவரவா் வீட்களுக்கு சென்றுள்ளனா்.

விஜயகுமாரின் ஊதியப் பணம் மூா்த்தியிடம் இருந்தது. மீண்டும் பணம் தேவைப்பட்டதால் மூா்த்தி வீட்டுக்குச் சென்று அண்ணன், தம்பி இருவரும் ஊதியப் பணத்தை கேட்டுள்ளனா். அப்போது நாளை தருவதாக மூா்த்தி கூற, அவா்கள் இப்போதே வேண்டும் எனக் கேட்டுள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த மூா்த்தி, இருவரையும் கெட்ட வாா்த்தைகளால் திட்டி, கீழே தள்ளி அருகே கிடந்த பொருள்களால் தாக்கியுள்ளாா். இதில் ரத்தக் காயமடைந்த விஜயகுமாா், சந்திரன் இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா், தலைமைக் காவலா் கோபிநாத் வழக்குப் பதிவு செய்து மூா்த்தியைக் கைது செய்தனா். பின்னா் அவரை காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT