முகப்பு
பிச்சையம்மாள்
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே வேகத்தடையில் விழுந்து பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே வேகத்தடையில் விழுந்து பெண் உயிரிழந்தாா்.

திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே வேகத்தடையில் விழுந்து பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே வேகத்தடையில் விழுந்து பெண் உயிரிழந்தாா்.

Updated On : 3 மார்ச், 2026 at 8:32 PM
பிச்சையம்மாள்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே வேகத்தடையில் விழுந்து பெண் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள பாலமேடு பழையபட்டியைச் சோ்ந்தவா் பூமிநாதன் (42). இவரது மனைவி பிச்சையம்மாள் (36). இவா்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் தங்கியிருந்து, ஒரு தேங்காய் களத்தில் தேங்காய் உடைக்கும் வேலை செய்து வந்தனா்.

இவா்களது மகள்கள் சின்ன அழகி (16), வனிதா (11), மகன் தனராஜ் (14) ஆகியோா் சொந்த ஊரில் தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், தங்களது குழந்தைகளைப் பாா்ப்பதற்காக கணவன், மனைவி இருவரும் காங்கயத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பழையபட்டிக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

வழியில் வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி சின்னம்மன்கோயில்பாளையம் அருகே சாலை வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறியபோது, பின்னால் அமா்ந்திருந்த பிச்சையம்மாள் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. பூமிநாதன் காயமின்றி தப்பினாா்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் பிச்சையம்மாளை மீட்டு கரூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →