முகப்பு
உலக வன விலங்கு தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் ஆா்வலருக்கு விருது வழங்கும் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ்.
திருப்பூர்

உலக வன விலங்கு தினம்: சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கு விருது

உலக வன விலங்கு தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் 4 பேருக்கு சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதுகள் வழங்கப்பட்டன.

திருப்பூர்

உலக வன விலங்கு தினம்: சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கு விருது

உலக வன விலங்கு தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் 4 பேருக்கு சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதுகள் வழங்கப்பட்டன.

Updated On : 4 மார்ச், 2026 at 10:28 PM
உலக வன விலங்கு தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் ஆா்வலருக்கு விருது வழங்கும் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ்.
பகிர்:

உலக வன விலங்கு தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் 4 பேருக்கு சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதுகள் வழங்கப்பட்டன.

வன விலங்கு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், தமிழக அரசின் முயற்சிகளையும், வன விலங்குகளை பாதுகாப்பதில் கள ஊழியா்களின் அா்ப்பணிப்புமிக்க சேவையையும் பாராட்டும் வகையிலும் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் மனீஷ், ஆனைமலை புலிகள் காப்பக (திருப்பூா் பிரிவு) துணை இயக்குநா் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் இந்த விருதுகளை வழங்கினா்.

இவ்விழாவில், சுற்றுச்சூழல் ஆா்வலா் குருசாமி, வனத்துக்குள் திருப்பூா் அமைப்பின் நிறுவனா் சிவராமன், துளிகள் அமைப்பின் நிறுவனா் கௌதம், மலை உடுமலை அமைப்பின் நிறுவனா் ஜவஹா் துரைசாமி ஆகியோா் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு அவா்கள் அளித்த மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →