காங்கயத்தில் 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள்: முதல்வா் திறந்துவைத்தாா்
காங்கயத்தில் கட்டப்பட்டுள்ள 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
திருப்பூர்காங்கயத்தில் 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள்: முதல்வா் திறந்துவைத்தாா்
காங்கயத்தில் கட்டப்பட்டுள்ள 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
காங்கயத்தில் கட்டப்பட்டுள்ள 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.37.49 கோடி மதிப்பீட்டில் பழைய குடிநீா்க் குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குடிநீா்க் குழாய்கள் பதித்தல், மேலும் 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், பணிகள் முடிவடைந்தததையடுத்து, 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, காங்கயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் பால்ராஜ் ஆகியோா் பங்கேற்று நீா்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீா் விநியோகப் பணிகளை தொடங்கிவைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில் காங்கயம் நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.