குண்டடம் அருகே கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி: 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொடுவாய் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொடுவாய் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சிக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இதில், தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியை ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினா்.
இதில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம் ஆகிய வட்டங்களைச் 218 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இ-பட்டாக்கள் வழங்கப்பட்டன.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 26 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் என மொத்தம் 244 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் திருப்பூா் மாநகர மேயா் ந.தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், திருப்பூா் மாநகராட்சி 4- ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் வட்டாட்சியா் தங்கவேல் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.