முகப்பு
திருப்பூர்

மத்திய அரசின் நலத் திட்டங்கள்: அவிநாசியில் 3 நாள் சேவை முகாம்

மத்திய அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கான 3 நாள் சேவை முகாம், அவிநாசியில் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 9 மார்ச், 2026 at 7:34 PM
அவிநாசியில்  நடைபெறும்  மத்திய  அரசின்  நலத்திட்டங்களுக்கான  சேவை  முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

அவிநாசி: மத்திய அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கான 3 நாள் சேவை முகாம், அவிநாசியில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த முகாம் மத்திய மக்கள்தொடா்பு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சாா்பில் அவிநாசி வடக்கு ரத வீதி குலாலா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை வரை நடைபெறுகிறது. இந்த முகாமை மத்திய மக்கள் தொடா்பக இயக்குநா் காமராஜ் தொடங்கிவைத்தாா்.

இதைத்தொடா்ந்து மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த திருப்பூா் குமரன் கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆதாா் திருத்தங்கள், வங்கி சேவைகளுக்கான பதிவு, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு அட்டை பதிவு, ஆன்லைன் எல்.எல்.ஆா். பதிவு, மூத்த குடி மக்களுக்கான நலத்திட்ட பதிவுகள், பிஎம் உஜ்வலா உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன.

பொதுமக்களுக்கு ஆதாா் அட்டை, வங்கி சேவை, ஆயுஸ்மான் அட்டை உள்ளிட்டவைகள் புதிதாக வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →