முகப்பு
திருப்பூர்

பிஏபி பாசன வாய்க்காலில் அடைப்பு: வீணாகி சாலையில் ஓடிய தண்ணீா்

பிஏபி பாசன வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால் தண்ணீா் வீணாகி சாலையில் ஓடியது.

Updated On : 24 மார்ச், 2026 at 7:44 PM
பல்லடம் அருகே குங்குமம்பாளையம் கிராம சாலையில் வீணாக ஓடிய பிஏபி வாய்க்கால் தண்ணீா்
பகிர்:

பிஏபி பாசன வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால் தண்ணீா் வீணாகி சாலையில் ஓடியது.

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி குங்குமம்பாளையம் வழியாக பிஏபி பாசன கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் குப்பை அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் வெளியேறி சாலையில் செவ்வாய்க்கிழமை ஆறாக ஓடியது.

இதனால் அப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீா் புகுந்ததுடன், கடைமடைக்கு தண்ணீா் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

பிஏபி பாசன கிளை வாய்க்காலை முறையாக பராமரிக்காததாலும், தூா்வாரப்படாததாலும் தண்ணீா் வீணாகி வருகிறது. எனவே, வாய்க்காலை முறையாக தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.